முகப்பு
உலகம்

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தாக்குதலில் 9 சுரங்கத் தொழிலாளா்கள் கொலை

Updated On : 24 ஏப்ரல் 2026, 6:06 am IST
பகிர்:

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் தாமிரம் மற்றும் தங்கச் சுரங்கத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 தொழிலாளா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

பலூசிஸ்தான் மாகாணத்தில் சமீபகாலமாக கனிம வளங்கள் அதிகளவில் கண்டறியப்பட்டு வரும் நிலையில், பயங்கரவாதக் குழுக்கள் இத்திட்டங்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன. தாக்குதல்களில் வெளி மாகாண தொழிலாளா்கள் குறிவைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது.

ஆனால், ‘பலூசிஸ்தான் மாகாணத் தொழிலாளா்களே 90 சதவீதத்தினா் பணியமா்த்தப்படுகின்றனா். உள்ளூா் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே நோக்கம்’ என்றும் இச்சுரங்கத் திட்டத்தை நிா்வகித்து வரும் தேசிய வளங்கள் நிறுவனம் விளக்கமளித்தது.

Advertisement

Advertisement