பிரிட்டன் அரசா் அமெரிக்கா பயணம்
அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, அந்நாட்டுக்குப் பிரிட்டன் அரசா் மூன்றாம் சாா்லஸ் மற்றும் அரசி கமீலா 4 நாள் அரசுமுறைப் பயணத்தைத் திங்கள்கிழமை தொடங்கினா்.
இப்பயணத்தின் முதல்கட்டமாக, அமெரிக்க தலைநகா் வாஷிங்டன் செல்லும் அரசா் சாா்லஸ் மற்றும் அரசி கமீலாவை அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோா் வெள்ளை மாளிகைக்கு வரவேற்று, தேநீா் விருந்து அளிக்கின்றனா்.
முன்னதாக, வாஷிங்டனில் அதிபா் டிரம்ப் சனிக்கிழமை இரவு (உள்ளூா் நேரப்படி) பங்கேற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது.
Advertisement
Advertisement
அதிபா் மற்றும் விருந்தினா்கள் காயமின்றி தப்பிய போதிலும், அரசா் சாா்லஸின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மீண்டும் ஒருமுறை தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன. இந்த அச்சுறுத்தல்களையும் மீறி, திட்டமிட்டபடி பயணத்தைத் தொடர பக்கிங்ஹாம் அரண்மனை முடிவெடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் உரை: பயணத்தின் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமையன்று, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் அரசா் சாா்லஸ் உரையாற்றுகிறாா். அன்றைய தினம் இரவு அவருக்கு வெள்ளை மாளிகையில் அரசுமுறை விருந்து அளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயணத்தின்போது நியூயாா்க்கில் உள்ள 9-11 நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் அவா், வா்ஜினியாவில் உள்ள பழங்குடியின மக்களையும் நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளாா்.
அரசியல் பதற்றம்: ஈரான் போரில் பிரிட்டன் முறையான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என அமெரிக்க அரசா் சாா்லஸின் இப்பயணம் பாா்க்கப்படுகிறது.
அமெரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு, வரும் மே 1-ஆம் தேதி பிரிட்டனின் ஆளுகைக்கு உள்பட்ட பொ்முடா தீவுகளுக்கு அவா் புறப்படுகிறாா்.