ஹோர்முஸ் நீரிணை திறக்க ஈரான் விருப்பம்: டிரம்ப் பேச்சு
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் விரும்புவதாக டிரம்ப் பேச்சு
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் என ஈரான் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சமூக ஊடகப் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, "ஈரான் வீழ்ச்சியடையும் நிலையில் இருப்பதாக எங்களிடம் தெரிவித்தனர். அவர்களின் தலைமையைத் தேடும் சூழ்நிலையில் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க விரும்புவதாகவும் அவர்கள் கூறினர். இதை அவர்களால் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டது. இருப்பினும், லெபனான் மீதான தாக்குதல் காரணமாக மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது.
Advertisement
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்களிக்கும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், உலகளவில் எண்ணெய் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சில நாடுகளில் எண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.