AP
உலகம்

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானையொட்டியுள்ள ஆப்கானிஸ்தானின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லைப்புற மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், பஜௌர், பன்னு ஆகிய பகுதிகளில் அண்மைக் காலத்தில் ஆப்கானிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக பாகிஸ்தானின் இந்தத் தாக்குதல்கள் அமைந்ததாக பாகிஸ்தான் விளக்கமளித்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானின் இந்தத் தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ‘புனித ரமலான் மாதத்தில் நடத்தப்பட்ட ஆப்கன் பிராந்தியத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட உயிர்ப்பலி ஏற்படுத்தியுள்ள பாகிஸ்தானின் வான் வழி தாக்குதல்களை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது’ என்று தெரிவித்தார்.

பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்த தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு, தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு கண்டனம் தெரிவித்து சம்மன் அனுப்பியுள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கு தக்க பதிலடி இருக்கும் என்றும் பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.

In response to media queries about Pakistan’s airstrikes on Afghanistan, Official Spokesperson Shri Randhir Jaiswal said: India strongly condemns Pakistan’s airstrikes on Afghan territory that have resulted in civilian casualties, including women and children, during the holy month of Ramadan."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

SCROLL FOR NEXT