கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா பந்துவீச்சு..! அணியில் 3 மாற்றங்கள்!
சென்னையில் நடைபெறும் இந்தியா - ஆப்கானிஸ்தான் ஒருநாள் போட்டி குறித்து...
சென்னையில் நடைபெறும் இந்தியா - ஆப்கானிஸ்தான் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வென்றதால் 2-0 என தொடரை கைப்பற்றியுள்ள நிலையில், கடைசி போட்டியிலும் வென்று ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் ஆக்குமா என்ற எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.
இந்தப் போட்டியில் இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷ் துபே, நிதீஷ் குமார் ரெட்டி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
Advertisement
Advertisement
ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, தர்வீஷ் ரசூலி, முகமது நபி, அஸ்மத்துல்லா ஒமர்சாய், ரஷித் கான், கசன்ஃபர், ஜியா உர் ரஹ்மான் ஷரீஃபி, ஃபரீத் அகமது மலிக்.
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷ் துபே, குர்னூர் ப்ரார், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ்.
Afghanistan opt to bat against india in Final ODI match
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.