இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் முதல் ஒருநாள் போட்டி: மழையினால் தாமதம்!
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி குறித்து...
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றன. இதில் டெஸ்ட்டில் இந்திய அணி 300 ரன்கள், மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தற்போது, முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் மதியம் 1 மணிக்கு தொடங்கவிருந்தது. இந்தப் போட்டி மழையின் காரணமாக டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் விராட் கோலி காயம் காரணமாக பங்கேற்கமாட்டார். அவருக்குப் பதிலாக ஜெய்ஸ்வால் அணியில் இடம்பெறுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
உத்தேச அணியாக ஷுப்மான் கில், ரோஹித் சர்மா, இஷான் கிஷன்/யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார்/பிரின்ஸ் யாதவ் சேர்க்கபடலான் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹார்திக் பாண்டியாவிற்குப் பதிலாக விளையாடும் நிதீஷ் குமார் ரெட்டி இந்தப் போட்டியில் என்ன செய்கிறார் என்பது இந்திய தேர்வுக்குழுவினால் கூடுதலாக உற்று நோக்கப்படுமென முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.