முகப்பு
உலகம்

ஈரான் உடனான மறைமுகப் பேச்சுவார்த்தை சிறந்த முறையில் நடைபெறுகிறது! - டிரம்ப் பேச்சு!

ஈரான் உடனான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் சிறந்த முறையில் நடைபெறுவதாக அமெரிக்க அதிபர் பேச்சு...

Updated On : 1 ஜூலை 2026, 10:42 pm IST
அமெரிக்க அதிபர் டிரம்ப் - AP
பகிர்:

கத்தாரில் நடைபெற்று வரும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மறைமுகப் பேச்சுவார்த்தை சிறந்த முறையில் நடைபெறுவதாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகக் கடந்த ஜூன் 17 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று (ஜூலை 1) அமெரிக்கா மற்றும் ஈரானிய பிரிநிதிகள் நேரடியாக ஒருவரையொருவர் சந்திக்காமல் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கத்தார் அரசு பரிசளித்த ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தின் மூலம் அதிபர் டிரம்ப் இன்று தோஹாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அதற்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தோஹாவில் ஈரான் உடன் சிறந்த முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருதாகக் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“தற்போதைய நிலவரப்படி தோஹாவில் சிறந்த முறையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஈரானின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கை சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மருமகனான ஜாரெட் குஷ்னர் மற்றும் சிறப்பு பிரதிநிதி ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கத்தார் சென்றனர்.

முன்னதாக, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்ற சில நிபந்தனைகளாவது அமல்படுத்தப்படும் வரையில் அமெரிக்கா உடன் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்த மாட்டோம் என ஈரானிய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Trump has stated that the indirect talks between the US and Iran currently taking place in Qatar are proceeding very well.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments