உக்ரைனின் தாக்குதல்களில் 8,500 ரஷியர்கள் பலி! வெளியானது அதிர்ச்சி தகவல்!
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் உக்ரைனின் தாக்குதல்களில் இதுவரை 8,500 ரஷியர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்...
உக்ரைன் உடனான போரில், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இதுவரை 8,500 ரஷியர்கள் கொல்லப்பட்டதாக, ரஷிய அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், இருதரப்பும் 4 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதில், ரஷியாவின் மாஸ்கோ மற்றும் உக்ரைனின் கீவ் ஆகிய நகரங்களின் மீது அதிகப்படியான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 2022 முதல் 2026 ஜூன் 30 ஆம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் உக்ரைன் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 30,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 8,434 பேர் கொல்லப்பட்டதாகவும் ரஷிய வெளியுறவு அமைச்சகம் நேற்று (ஜூலை 3) தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இத்துடன், உக்ரைன் மற்றும் ரஷியாவுக்கு இடையே கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் மோதல்களில் 373 குழந்தைகள் கொல்லப்பட்டதும், 1,845 குழந்தைகள் படுகாயமடைந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், 42 ரஷிய நகரங்களில் உள்ள மக்கள் கட்டமைப்புகளைக் குறிவைத்து உக்ரைனின் படைகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இத்துடன், வெள்ளிக்கிழமை இரவு ரஷிய தலைநகர் உள்ளிட்ட நகரங்களை நோக்கி ஏவப்பட்ட 28 உக்ரைனிய ட்ரோன்களை ரஷிய படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன.
இத்துடன், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கான்ஸ்டான்டினோவ்கா நகரத்தை ரஷிய படைகள் முழுவதுமாகக் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The Russian government has stated that 8,500 Russians have been killed in the war with Ukraine since 2022.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.