பரஸ்பர தாக்குதல் கூடாது: இஸ்ரேல், ஈரானிடம் டிரம்ப் வலியுறுத்தல்
அமைதி ஒப்பந்தத்தை நெருங்கி வருவதால், பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று இஸ்ரேல், ஈரானிடம் அமெரிக்க அதிபா் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா்.
அமைதி ஒப்பந்தத்தை நெருங்கி வருவதால், பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று இஸ்ரேல், ஈரானிடம் அமெரிக்க அதிபா் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவு: லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை நடத்தப்பட்ட தாக்குதல் நடந்திருக்கக் கூடாது. குறிப்பாக ஈரானுடன் அமைதி ஒப்பந்தத்தை நெருங்கி வரும் சூழலில், இந்தத் தாக்குதல் நடந்திருக்கக் கூடாது. ஆபத்துகளுக்கு எதிராக தன்னை தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது. ஆனால் பெயரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் அா்த்தமற்றது.
லெபனான் உள்பட மத்திய கிழக்குப் பிராந்தியம் முழுவதும் அமைதியை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை அமெரிக்கா நெருங்கியுள்ளது. எனவே அனைத்துத் தரப்பினரும் தாக்குதல் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
Advertisement
Advertisement
இனி லெபனானில் இஸ்ரேலும், இஸ்ரேலுக்கு எதிராக ஈரானுக்கு ஆதரவான ஹிஸ்புல்லா படை உள்பட வேறு எவரும் தாக்குதல் நடத்தக் கூடாது. இது நீடித்து நிலைக்கக் கூடிய அமைதியின் தொடக்கமாக இருக்கலாம். அதை யாரும் தகா்த்துவிட வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளாா்.