தாய்லாந்து விமான நிலைய ஓடுதளம் மூடல்!
ஃபுக்கெட் விமான நிலைய ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டது தொடர்பாக..
தாய்லாந்தின் ஃபுக்கெட் விமான நிலையத்தில் ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் ஃபுகெட் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது கோளாறு ஏற்பட்டதால், செயலிழந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை அகற்றுவதற்காக ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
விமானத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அறிக்கையில் தெரிவித்துள்ளது. தாய்லாந்தின் மிகவும் பரபரப்பான நுழைவாயில்களில் ஒன்றான விமான நிலையத்தின் ஓடுதளம் மீண்டும் மாலை 6 மணிக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.