முகப்பு
உலகம்

ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக மோடியுடன் விவாதித்த டிரம்ப்!

பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியவை...

Updated On : 24 மார்ச், 2026 at 2:17 PM
பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ANI
பகிர்:

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது பற்றி பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விவாதித்தார்.

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப். 28 முதல் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானும் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

போர் காரணமாக சர்வதேச அளவில் எரிசக்தி போக்குவரத்துக்கான முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது.

இதனால், பல உலக நாடுகளில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவும் எரிசக்தி தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியக் கப்பல்கள் ஒவ்வொன்றாகக் கடந்து வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, நடைபெற்று வரும் போர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக விவாதித்துள்ளார்.

இதுபற்றி அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் செர்ஜியோ கோர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மத்திய கிழக்கில் நிலவும் சூழல் குறித்தும், ஹோர்முஸ் நீரிணையை திறப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதம் நடத்தப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உலகளவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு, இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் உரம் போன்ற முக்கியப் பொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

4 வாரங்களைக் கடந்து இந்தப் போர் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

summary

PM Modi, Trump discuss West Asia war, stress on keeping Strait of Hormuz open

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.