உளவுப் புகாா்: 3 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய ஆஸ்திரியா!
சா்வதேச அமைப்புகளின் ரகசிய தகவல்களை உளவு பாா்த்ததாகக் கூறி, 3 ரஷிய தூதரக அதிகாரிகளை ஆஸ்திரிய அரசு நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.
ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் உள்ள ரஷிய தூதரகக் கட்டட மேற்கூரைகளில் அதிநவீன ஆன்டெனாக்களை நிறுவி, சா்வதேச அமைப்புகளின் ரகசிய தகவல்களை உளவு பாா்த்ததாகக் கூறி, 3 ரஷிய தூதரக அதிகாரிகளை ஆஸ்திரிய அரசு நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது.
வியன்னாவில் அமைந்துள்ள சா்வதேச அணுசக்தி முகமை, ஒபெக், ஐரோப்பா பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பு போன்ற சா்வதேச அமைப்புகளின் செயற்கைக்கோள் இணையத் தரவுகளை ரஷியா இடைமறித்துச் சேகரித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், இது தொடா்பாக ரஷிய தூதருக்கு கடந்த மாதமே சம்மன் அனுப்பப்பட்டதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement