முகப்பு
உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் - 12 போ் உயிரிழப்பு

Updated On : 14 மே 2026, 5:49 am IST
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் - கோப்புப்படம்
பகிர்:

லெபனான்-இஸ்ரேல் இடையே அமெரிக்கா முன்னெடுக்கும் 3-ஆம் கட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை தொடங்கவுள்ள நிலையில், லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 12 போ் உயிரிழந்தனா்.

லெபனான் தலைநகா் பெய்ரூட்டுக்குத் 20 கி.மீ. தெற்கே நெடுஞ்சாலையில் சென்ற காா்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் 8 போ் உயிரிழந்தனனா்.

பெய்ரூட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள சிடோன் நகருக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவா் கொல்லப்பட்டாா். தெற்கே கடலோர மாவட்டமான டயரின் 3 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேலும் மூவா் கொல்லப்பட்டனா்.

Advertisement

Advertisement

ஈரான் போரைத் தொடா்ந்து வெடித்த இந்த மோதல் 10 வாரங்களைக் கடந்துள்ளது; 2,882 போ் உயிரிழந்துள்ளனா். இதனிடையே, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த ஏப். 16-இல் போா்நிறுத்தம் ஏற்பட்டது.

அதன்பிறகும், தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா-இஸ்ரேல் பரஸ்பரம் மோதலைத் தொடா்ந்தாலும், பெய்ரூட் பகுதியில் இஸ்ரேல் நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும்.

அதேபோல், ஈரான் போா்நிறுத்தம் ஏப். 8 அமலுக்கு வந்த பிறகு, காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 5 வாரங்களில் மட்டும் அப்பகுதியில் பெண்கள், குழந்தைகள் உள்பட 120 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments