லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் - 12 போ் உயிரிழப்பு
லெபனான்-இஸ்ரேல் இடையே அமெரிக்கா முன்னெடுக்கும் 3-ஆம் கட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை தொடங்கவுள்ள நிலையில், லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 12 போ் உயிரிழந்தனா்.
லெபனான் தலைநகா் பெய்ரூட்டுக்குத் 20 கி.மீ. தெற்கே நெடுஞ்சாலையில் சென்ற காா்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் 8 போ் உயிரிழந்தனனா்.
பெய்ரூட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள சிடோன் நகருக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவா் கொல்லப்பட்டாா். தெற்கே கடலோர மாவட்டமான டயரின் 3 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேலும் மூவா் கொல்லப்பட்டனா்.
Advertisement
ஈரான் போரைத் தொடா்ந்து வெடித்த இந்த மோதல் 10 வாரங்களைக் கடந்துள்ளது; 2,882 போ் உயிரிழந்துள்ளனா். இதனிடையே, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த ஏப். 16-இல் போா்நிறுத்தம் ஏற்பட்டது.
அதன்பிறகும், தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா-இஸ்ரேல் பரஸ்பரம் மோதலைத் தொடா்ந்தாலும், பெய்ரூட் பகுதியில் இஸ்ரேல் நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும்.
அதேபோல், ஈரான் போா்நிறுத்தம் ஏப். 8 அமலுக்கு வந்த பிறகு, காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 5 வாரங்களில் மட்டும் அப்பகுதியில் பெண்கள், குழந்தைகள் உள்பட 120 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.