இனி, சாட்ஜிபிடியால் பயனரின் வங்கிக் கணக்கைப் பார்க்க முடியும்! எப்படி? ஏன்?
இனி, சாட்ஜிபிடியால் பயனரின் வங்கிக் கணக்கைப் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓபன் ஏஐ தற்போது தன்னுடைய பயனர்களுக்கு நிதித்துறை சார்ந்த புதிய சேவையை சாட்ஜிபிடி மூலம் வழங்கவிருக்கிறது.
சாட்ஜிபிடியில், பயனர்கள் தங்களுடைய வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு, முதலீட்டுக் கணக்குகளை இணைத்துவிட்டால் போதும், உங்கள் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை ஜல்லடைப்போட்டு சலித்துச் சொல்லிவிடும் சாட்ஜிபிடி.
ஆனால் இந்த வசதி தற்போதைக்கு அமெரிக்காவில் உள்ள ப்ரோ பயனர்களுக்கு மட்டுமே. இவர்கள் மாதத்துக்கு 200 டாலர்கள் செலுத்தி இந்த சேவையை பெற்று வருகிறார்கள். பிறகு, இது பிளஸ் பயனர்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து அனைவருக்குமாக மாறும் என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.
Advertisement
summary