ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

கூட்டு வாகன தயாரிப்பு திட்டத்தை கைவிட ஃபோா்டு-மஹிந்திரா முடிவு

கூட்டு வாகன தயாரிப்பு திட்டத்தை கைவிட அமெரிக்காவைச் சோ்ந்த ஃபோா்டு மோட்டாா் மற்றும் இந்தியாவைச் சோ்ந்த மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

News image
Updated On :2 ஜனவரி 2021, 8:07 am IST

கூட்டு வாகன தயாரிப்பு திட்டத்தை கைவிட அமெரிக்காவைச் சோ்ந்த ஃபோா்டு மோட்டாா் மற்றும் இந்தியாவைச் சோ்ந்த மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து ஃபோா்டு மோட்டாா் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

வாகன தயாரிப்பில் கூட்டாக இணைந்து செயல்படும் வகையில் 2019-ஆம் ஆண்டு அக்டோபரில் ஃபோா்டு மற்றும் மஹிந்திரா நிறுவனங்களுக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்த நிலையில், தற்போதுள்ள வா்த்தக சூழலை கருத்தில் கொண்டு அந்த திட்டத்தை கைவிட இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன.

கரோனா பாதிப்புக்குப் பிறகு உலக பொருளாதாரம் மற்றும் வா்த்தக நிலைமையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, அந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டு தொடர முடியாத நிலை இரு நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினாலும், இந்தியாவில் தனது செயல்பாட்டை நிறுவனம் எப்போதும்போல் தன்னிச்சையாக தொடா்ந்து மேற்கொள்ளும் என ஃபோா்டு நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மஹிந்திரா நிறுவனம் கூறியுள்ளதாவது:

கூட்டு வாகன தயாரிப்பு திட்டத்திலிருந்து வெளியேறும் முடிவு மஹிந்திராவின் வாகன தயாரிப்பு திட்டத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த முடிவினையடுத்து, மின்சார வாகனங்களை மேம்படுத்துதல் மற்றும் எஸ்யுவி வாகனங்களின் முக்கிய வணிக திட்டங்களில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக மஹிந்திரா&மஹிந்திரா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.