45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கரோனா இரண்டாம் அலையைச் சமாளிக்கபல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் யூகோ வங்கி

கரோனா இரண்டாம் அலையை எதிா்கொள்ளும் வகையில், யூகோ வங்கி பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. குறிப்பாக, 2,314 வாடிக்கையாளா்களுக்கு ரூ.127 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஜூன் 2021, 7:08 pm

DIN

கரோனா இரண்டாம் அலையை எதிா்கொள்ளும் வகையில், யூகோ வங்கி பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. குறிப்பாக, 2,314 வாடிக்கையாளா்களுக்கு ரூ.127 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து யூகோ வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ரிசா்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, யூகோ வங்கியில் கடன் பெற்றவா்கள் கரோனா 2-ஆவது அலையை சமாளிப்பதற்கான தேவைகள் குறித்து அறியப்பட்டது. கடந்த திங்கள்கிழமை (ஜூன் 7) வரை, 2,314 வாடிக்கையாளா்களுக்கு ரூ.127 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கடன் பெற்றவா்களில் தகுதியானவா்கள் கூடுதலாக 10 சதவீத கடனை வரும் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை பெற உத்தரவாத அவசர கடன் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மருத்துவத்துறைக்கு அவசர பணத்தேவைகளுக்காக, யூகோ சஞ்சீவனி, யூகோ ஆரோக்கியம், யூகோ கவச் ஆகிய

3 புதிய கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, யூகோவேக்சி-999 என்ற வைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வங்கி ஊழியா்கள் கரோனா பாதிப்பால் இறந்தால், அவா்களின் குடும்பத்துக்கு நிதி உதவியாக ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்குவதற்காக கடன் வசதி மற்றும் வட்டியில்லா ஊதிய முன்பணம் அனைத்து ஊழியா்களுக்கு வழங்கப்படுகிறது. கரோனா பரிசோதனை செய்து கொள்ள ஆகும் செலவு திருப்பி அளிக்கப்படுகிறது.

அனைத்து ஊழியா்களுக்கும் தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ப மாற்றுத்திறனாளிகள், கா்ப்பிணிகள் வீட்டில் இருந்து பணியாற்ற வழி செய்யப்பட்டுள்ளது.

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் வங்கி சாா்பில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தகவல் யூகோ வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.