நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நான்கு நாள்கள், 10 ஆயிரம் ‘விவேகம்’ டிக்கெட்டுகள்: போரூர் ஜிகே திரையரங்கத்தின் சாதனை!

படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்த தகவல்கள் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளன...

News image
Updated On :26 ஆகஸ்ட் 2017, 1:11 pm IST

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் - விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இசை - அனிருத். விவேகம் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்தப் படம் கடந்த வியாழன் அன்று வெளியானது. படத்துக்குக் கலவையான விமரிசனங்கள் வெளிவந்தாலும் வசூலில் பல சாதனைகளைப் படைத்துவருகிறது.

இந்நிலையில் சென்னை போரூரில் உள்ள ஜிகே திரையரங்கத்தில் விவேகம் படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்த தகவல்கள் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 24 முதல் ஆகஸ்ட் 27 வரை, இந்த 4 நாள்களில் மட்டும் 10,000 டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துள்ளதாக ஜிகே திரையரங்கம் சார்பாக ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க 2-ம் நாளான வெள்ளிக்கிழமை காலை 1.45 மணிக்குச் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டுள்ளது. அதன்பிறகு காலை 5 மணிக் காட்சியும் தொடர்ந்துள்ளது. விவேகம் படத்தின் வசூல் நிலவரங்கள் இதுபோன்று பல்வேறு தரப்பினரால் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.