ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

அரசியலுக்கு காலம் மிக முக்கியம்: ரஜினி பேச்சு!

கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் 4-ம் நாள் சந்திப்பில் வேலூர், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட ரசிகர்களை...

News image
Updated On :29 டிசம்பர் 2017, 4:02 am

எழில்

சினிமா ஆனாலும் அரசியல் ஆனாலும் காலமே மிக முக்கியம் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் 4-ம் நாள் சந்திப்பில் வேலூர், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசியது:

என் நண்பர்கள், குருநாதர்கள் அதிகம் வாழும் ஊர் கோவை. ஆன்மிகத்தை கற்றுக்கொடு; மதத்தை கற்று தராதே என குருநாதர் சச்சிதானந்தர் எனக்கு அறிவுரை வழங்கினார்.

சினிமா ஆனாலும் அரசியல் ஆனாலும் காலமே மிக முக்கியம்; காலம் வந்தால் எல்லாம் தானாக மாறும்.

எப்படி வாழ்கிறோம் என்பதை வைத்துத்தான் நம்மை மக்கள் மதிப்பார்கள். நடிப்பைத் தாண்டி பல நற்பண்புகள் சிவாஜியிடம் இருந்தன. பணம், புகழை விட மனிதனின் குணம் தான், அவனைக் காலம் கடந்து வாழவைக்கும். இதற்குச் சிறந்த உதாரணம், எம்ஜிஆர். 

பெயர், புகழால் மரியாதை கிடைக்கும், ஒருவரது குணமே அதிக மதிப்பைப் பெற்றுத்தரும் என்றார் ரஜினிகாந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.