திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நடிகையைக் கடத்திய முக்கிய குற்றவாளியுடன் போனில் பேசிய தயாரிப்பாளர்: திடுக்கிடும் தகவல்கள்

கடத்தல் விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியாக உள்ள பல்சர் சுனியின் தொலைப்பேசி உரையாடல்களை...

News image
Updated On :19 ஜூலை 2017, 7:02 am

எழில்

தமிழ், மலையாளப் படங்களில் நடித்துவரும் கேரள நடிகை தனது காரில் வெள்ளிக்கிழமை இரவு படப்பிடிப்பு முடித்து கொச்சியிலிருந்து திருச்சூருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். இவரது கார் எர்ணாகுளத்தை அடுத்த அங்கமாலி அருகே வந்தபோது, மற்றொரு வேனில் வந்த மர்மக் கும்பல் நடிகையின் காரை வழிமறித்தது. வேனில் இருந்த மர்ம நபர்கள், கார் ஓட்டுநரைத் தாக்கி நடிகையை காருடன் கடத்திச் சென்றனர். அப்போது நடிகையைத் துன்புறுத்தி, அந்த காட்சியை புகைப்படமாகவும், விடியோவாகவும் அவர்கள் பதிவு செய்தனர். பிறகு, காரில் இருந்து இறங்கி மற்றொரு காரில் ஏறி அந்தக் கும்பல் தப்பிச் சென்றது. இதையடுத்து, காக்கநாடு பகுதியில் உள்ள ஓர் இயக்குநரின் வீட்டுக்குத் தானே காரை ஓட்டிச் சென்று நடிகை உதவி கேட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், நடிகை துன்புறுத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கோவையில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் கேரள தனிப்படை ஐ.ஜி. தினேஷ் காஷ்யப் உத்தரவின் பேரில், எர்ணாகுளம் ரூரல் எஸ்.பி. சி.விக்ரம் தலைமையிலான காவல் துறையினர் கோவை வந்தனர். பின்னர், கோவையில் பதுங்கி இருந்த இருவரைக் கைது செய்தனர். அவர்கள், ஆலப்புழையைச் சேர்ந்த சலீம், கண்ணூரைச் சேர்ந்த பிரதீப் என்று கூறப்படுகிறது.

மேலும் 7 பேரிடம் விசாரணை: இதனிடையே, நடிகை துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது கார் ஓட்டுநர் மார்ட்டின் உள்பட 7 பேரிடம் கேரள போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில், மலையாள நடிகர்-நடிகையர்களிடம் முன்பு கார் ஓட்டுநராகப் பணிபுரிந்த பல்சர் சுனி என்பவர் உள்பட மேலும் 6 பேருக்குத் தொடர்பிருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனிடையே, நடிகையின் வாக்குமூலத்தை பெண் நீதிபதி ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்தார். கொச்சி அருகே உள்ள மருத்துவமனைக்கு நடிகை அழைத்துச் செல்லப்பட்டு, அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

கடத்தல் விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியாக உள்ள பல்சர் சுனியின் தொலைப்பேசி உரையாடல்களை காவல்துறை பெற்றுவருகிறது. அதில் சம்பவம் நடந்த அன்றைய தினத்தின் இரவில் ஒரு படத் தயாரிப்பாளருடன் பல்சர் சுனி பேசியது தெரியவந்துள்ளது. அன்றைய 6 பேரில் பேசியுள்ளார் சுனி. அதில் படத்தயாரிப்பாளரும் ஒருவர் என்பதால் இச்சம்பவத்துக்கும் திரைத்துறையினருக்கும் தொடர்பு இருக்குமா என்கிற கோணத்திலும் காவல்துறை விசாரித்துவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.