நாடு காக்கும் நற்பணியை மட்டும் மேற்கொள்ளவேண்டும் என தனது ரசிகர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக தனது சுட்டுரை பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் பதிவு செய்துள்ள செய்தி :
எனது ரசிகர்கள் எக்காரணம் கொண்டும் தரம் தாழ்ந்து போக வேண்டாம். சுவரொட்டிகள் ஒட்டும் பணியில் காலத்தையும் பணத்தையும் விரயமாக்க வேண்டாம். நாடு காக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ (ரசிகர்கள்) தேவை. இவர்களுக்கு (ஆட்சியாளர்கள்) பதில் அளிக்க நான் மட்டுமே போதும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.