அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சென்னை எனக்கு ரொம்ப ஸ்பெஷல்! துல்கர் சல்மான் நெகிழ்ச்சி!

மலையாளத்தில் 2012-ம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 11:03 am

DIN

மலையாளத்தில் 2012-ம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். அதன் பின் 2014-ம் ஆண்டு வெளியான‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.

உஸ்தாத் ஹோட்டல், சார்லி போன்ற வெற்றிப் படங்கள் மலையாளத்தில் அவரை முன்னணி ஹீரோவாக்கியது. அதன் பின் தமிழிலும் இயக்குனர் மணி ரத்னத்தின் ‘ஓகே கண்மணி’யில் அவரது நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது, சமீபத்தில் வெளியான ‘சோலோ’, தமிழில் சரிவரக் கவனம் பெறவில்லை என்றாலும் மலையாளத்தில் அவருக்கு நல்ல பெயரை எடுத்துத் தந்துள்ளது.

Story image

துல்கர் பிறந்தது கொச்சியில் என்றாலும், பள்ளிப் படிப்பை சென்னையில்தான் முடித்தார். எனவே, அவருக்கு சென்னை ரொம்பவே  ஸ்பெஷல். படப்பிடிப்புக்காக சென்னை வரும் சமயங்களில் மிகவும் சந்தோஷமாக உணருவதாகக் கூறிய துல்கர்,  'சென்னை எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். இங்கே இன்னும் சொந்த வீடு இருக்கிறது. என் மாமனார் மாமியார் சென்னையில் தான் வசிக்கின்றனர்.

மலையாளப் படங்களின் ஷூட்டிங்கிற்காக நிறைய நேரம் கேரளாவிலேயே செலவிட வேண்டியிருப்பதால், சென்னையை இப்போதெல்லாம் மிஸ் செய்கிறேன். ஷூட்டிங் இல்லையென்றால் சென்னைக்கே இடம்பெயர்ந்து வந்து விடுவேன்’ என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.