யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

கேரவன் கலாச்சாரத்தை கண்டு அதிசயிக்கும் நடிகை நிரோஷா!

நான் நடிக்க வந்த போது ஷூட்டிங் நடைபெறும் சமயங்களில் அனைத்து நடிகர், நடிகைகளும் படப்பிடிப்பு தளத்துக்குள் ஒன்றாக இணைந்து அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருப்போம். இன்று அப்படியொரு காட்சியைக் காணவே 

Published On :

மிக நீண்ட இடைவெளிக்குப் பின் டோலிவுட்டில் ரீ எண்ட்ரி கொடுக்கவிருக்கும் நடிகை நிரோஷா இன்றைய இளம் தலைமுறை நடிகர்களைப் பார்த்து வெகுவாக வியந்து போகிறார். இன்றைய இளம் நடிகைகள் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னரே நடிப்பிற்குத் தேவையான திறமைகளை எல்லாம் வளர்த்து கொண்டு வந்து விடுகிறார்கள். எனவே அவர்களுக்கு பெரிய திரை, சின்னத்திரை என எந்தத் திரையாக இருந்தாலும் நடிப்பு மிக எளிதான விசயமாகி விடுகிறது. நான் இடைப்பட்ட காலங்களில் நடிக்காமல் இருந்தாலும் என் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழித்தேன். எப்போதுமே நான் வீட்டை விட்டுப் பிரிந்திருக்க விரும்பியதில்லை. ஷூட்டிங் முடிந்தால் வீடு தான் என் ஒரே இலக்கு.

ஆனாலும் என் கணவர் தொடர்ந்து திரையுலகில் இருந்து வருவதால், இங்கே நடக்கும் எல்லா விசயங்களும் எனக்கு உடனடியாக அப்டேட் ஆகி விடும். நானும், என் கணவரான ராம்கியும் வீட்டிலிருக்கும் போது புதிதாக வெளி வந்துள்ள தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்கள் குறித்து விவாதித்துக் கொண்டிருப்போம். அதனால் நான் நீண்ட இடைவெளி விட்டிருந்த போதும் எனக்கு சினிமா உலகம் அந்நியமாகத் தோன்றவில்லை. ஒரே ஒரு விசயம் மட்டும் தான் எனக்கு வித்யாசமாகத் தோன்றுகிறது.

நான் நடிக்க வந்த போது ஷூட்டிங் நடைபெறும் சமயங்களில் அனைத்து நடிகர், நடிகைகளும் படப்பிடிப்பு தளத்துக்குள் ஒன்றாக இணைந்து அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருப்போம். இன்று அப்படியொரு காட்சியைக் காணவே முடியவில்லை. இளம் நடிகர், நடிகைகள் ஆளுக்கொரு கேரவன் வைத்துக் கொண்டு ஷூட்டிங் இடைவேளையில் அவற்றுக்குள் புகுந்து கொள்கிறார்கள். அது ஒன்று தான் எனக்கு வியப்பாக இருந்தது. இப்படி இருந்தால் அவர்கள் எப்படி ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ள முடியும், எப்படி ஒருவருக்கொருவர் கலந்து பேச முடியும்? என்று தோன்றும் எனக்கு. ஆனால் இன்றைய நடிக, நடிகைகளின் திறனைக் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் மிகுந்த திறமைசாலிகளாகவும் இருக்கிறார்கள் என்கிறார் நிரோஷா.

அது மட்டுமல்ல, நடிக்கத் தொடங்கி இத்தனை ஆண்டுகள் கடந்தும் நான், நதியா மற்றும், சுகன்யா உள்ளிட்டோர் இப்போதும் எங்களது தோற்றத்தில் கவனம் செலுத்தி வருவதால் புதிய வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ளும் ஆவலுடன் தான் இருக்கிறோம். நல்ல வாய்ப்புகள் வந்தால் தமிழ், தெலுங்கில் வித்யாசமான குணச்சித்திர கதாபாத்திரங்களை வரவேற்கும் முடிவில் இருக்கிறோம் என்றும் நிரோஷா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.