அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சூர்யா - கே.வி.ஆனந்த் இணையும் படத்தில் அமிதாப் பச்சன்?

ஏப்ரல் முதல் கே.வி. ஆனந்த் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சூர்யா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்...

News image
Updated On :7 பிப்ரவரி 2018, 10:15 am

எழில்

செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக இயக்குநர் கே.வி. ஆனந்துடன் மீண்டும் இணைகிறார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அயன், மாற்றான் படங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைகிறார்கள். ஒரு படத்தின் தோல்விக்குப் பிறகு அப்படத்தின் நடிகர் - இயக்குநர் கூட்டணியை மீண்டும் காணமுடியாது. ஆனால் மாற்றான் படம் வெற்றியடையாவிட்டாலும் கே.வி.ஆனந்துடன் மீண்டும் இணைகிறார் சூர்யா.

அயன், மாற்றான் படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். அதேபோல இந்தப் படத்துக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பார் எனத் தெரிகிறது. லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. 

ஏப்ரல் முதல் கே.வி. ஆனந்த் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சூர்யா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும் கே.வி. ஆனந்த் படத்துக்குப் பிறகு விக்ரம் குமார், ஹரி ஆகிய இரு இயக்குநர்களுடன் மீண்டும் இணையவுள்ளதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார். 

இதன் அடுத்தக்கட்டமாக படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனை நடிக்கவைக்க கே.வி. ஆனந்த் விரும்புகிறார். எனவே இதுகுறித்து அமிதாப் பச்சனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் சூர்யா - கே.வி. ஆனந்த் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. அதில் அமிதாப் பச்சன் நடிப்பது குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.