திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கன்னட நடிகரை சென்னையில் கைது செய்தனர்! இதுதான் காரணம்

News image
Updated On :8 ஜூன் 2018, 5:56 pm IST

சாண்டல்வுட்டில் மாஸ்தி குடி என்ற பெயரில் ஒரு படம் கட்ந்த மாதம் வெளியானது. இதில் நடிகர் துனியா விஜய், அமுல்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுந்தர் கெளடா என்பவர் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த போது எதிர்பாராத விதமாக அனில் ராகவ் மற்றும் உதய் எனும் இரண்டு நடிகர்கள் ஹெலிகாப்டரிலிருந்து தண்ணீரில் விழுந்து மரணம் அடைந்தனர். அவர்களின் உடல்களை கன்னட போலீஸார் மீட்டனர்.

இது தொடர்பாக சுந்தர் கௌடா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜராக கூறப்பட்டது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரை போலீசார் கைது செய்ய வந்தனர். அப்போது அவர் துனியா விஜயுடன் பேசிக் கொண்டிருந்தார். போலீஸார் வந்தபோது உடை மாற்றிக் கொண்டு வருவதாகச் சொல்லிய அவர், நொடிப் பொழுதில் தப்பிவிட்டார். அவரை துனியா விஜய் தப்ப வைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவரும் காணாமல் போகவே இருவரையும் பங்களூரு போலீஸ் தேடி வந்தது. போலீஸார் காரணத்தால் கோர்ட் சம்மன் ஒருவரை தப்ப வைத்த துனியா விஜய்யை பங்களூரு போலீசார் இன்று சென்னையில் கைது செய்தனர். 

இந்தச் சம்பவம் கன்னடத் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.