தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: இன்று பேரவையில் தீா்மானம்மழைக்கால கூட்டத் தொடர் இறுதி வாரம்! முக்கிய மசோதாக்கள்: மத்திய அரசு தீவிரம்மருத்துவப் படிப்புகள்: இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடுஅமைதி ஒப்பந்த நிபந்தனைகள் அமலாகாதவரை அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான்
/

ரஜினி நடிக்க மறுத்த முதியவர் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்!

மிகவும் ரகசியமாகத்தான் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இத்தகவல்கள் வெளியே வந்தது குறித்து ஆச்சர்யமாக உள்ளது...

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:34 pm IST

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கி, கவனம் ஈர்த்த மணிகண்டன் அடுத்ததாக கடைசி விவசாயி என்கிற படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் 70 வயது விவசாயி வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இதற்கு முன்பு, மணிகண்டன் இயக்கிய ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய் சேதுபதி நடித்தார். அதன்பிறகு இப்படத்தின் மூலமாக இருவரும் மீண்டும் இணையவுள்ளார்கள். 

இதுகுறித்து இயக்குநர் மணிகண்டன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இப்படத்தின் முக்கியமான வேடத்தில் நடிக்க ரஜினிகாந்த்தை அணுகினேன். ஆனால் அவரால் நடிக்க முடியாததால், என்னுடைய நல்ல நண்பரான விஜய் சேதுபதியிடம் கேட்க எண்ணினேன். அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை. அவர் மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் மும்முரமாக நடித்துவருகிறார். இன்னும் ஒருவாரத்தில் சரியான தகவல்களைத் தருகிறேன். மிகவும் ரகசியமாகத்தான் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இத்தகவல்கள் வெளியே வந்தது குறித்து ஆச்சர்யமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.