காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கி, கவனம் ஈர்த்த மணிகண்டன் அடுத்ததாக கடைசி விவசாயி என்கிற படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் 70 வயது விவசாயி வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இதற்கு முன்பு, மணிகண்டன் இயக்கிய ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய் சேதுபதி நடித்தார். அதன்பிறகு இப்படத்தின் மூலமாக இருவரும் மீண்டும் இணையவுள்ளார்கள்.
இதுகுறித்து இயக்குநர் மணிகண்டன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இப்படத்தின் முக்கியமான வேடத்தில் நடிக்க ரஜினிகாந்த்தை அணுகினேன். ஆனால் அவரால் நடிக்க முடியாததால், என்னுடைய நல்ல நண்பரான விஜய் சேதுபதியிடம் கேட்க எண்ணினேன். அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை. அவர் மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் மும்முரமாக நடித்துவருகிறார். இன்னும் ஒருவாரத்தில் சரியான தகவல்களைத் தருகிறேன். மிகவும் ரகசியமாகத்தான் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இத்தகவல்கள் வெளியே வந்தது குறித்து ஆச்சர்யமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூன் 25: தொடர்ந்து 3-வது நாளாகக் குறைந்த தங்கம் விலை! இன்று எவ்வளவு?

பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்! ஆட்டோ, ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!

சட்டப்பேரவை மரபை மீறவில்லை! திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனா

ஐரோப்பாவில் கடும் வெய்யில்! பிரான்ஸில் 40 பேர் பலி!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



