ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

வருமானப் பகிர்வை முடிவு செய்யும் நடிகர்கள்: திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் புதிய முடிவு!

தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம், வருமானப் பகிர்வு தொடர்பாக புதிய முடிவு எடுத்துள்ளது.

News image
Updated On :28 மே 2019, 10:21 am

எழில்

தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கம், வருமானப் பகிர்வு தொடர்பாக புதிய முடிவு எடுத்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பராமரிப்புச் செலவுகள் உயர்வு, சொத்து வரி உயர்வு, வேலையாள்கள் ஊதிய உயர்வு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நடிகர்களுக்கு ஏற்றாற்போல புதிய வருமானப் பகிர்வு நடைமுறைக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி, அஜித், விஜய் ஆகியோர் ஒரு பிரிவிலும் சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் மற்றொரு பிரிவிலும் இடம்பெற்றுள்ளார்கள். இந்த நடிகர்கள் தவிர இதர நடிகர்கள் ‘மற்ற நடிகர்கள்’ பிரிவில் இடம்பெற்றுள்ளார்கள்.

ரஜினி, அஜித், விஜய் ஆகியோரின் படங்களின் வருமானப் பகிர்வு - நகரங்களில் 60 சதவிகிதமும் இதரப் பகுதிகளில் 65 சதவிகிதமும் என நடிகர்களுக்கு ஏற்றாற்போல அமைக்கப்பட்டுள்ளன. அடுத்தப் பிரிவில் உள்ள நடிகர்களின் பட வருமானம் 55% - 60% என்றும் மற்றவை பிரிவில் உள்ள நடிகர்களின் பட வருமானம் 50 - 50% என்றும் பிரிக்கப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.