மீண்டும் இசையமைப்பாளர் ஆனார் பவதாரிணி!

மித்ர் மை ஃப்ரண்ட் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான பவதாரிணி கடைசியாக 2012-ல் போரிட பழகு என்கிற படத்துக்கு
மீண்டும் இசையமைப்பாளர் ஆனார் பவதாரிணி!

இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி, மீண்டும் இசையமைப்பாளராகியுள்ளார்.

அறிமுக இயக்குநர் அசோக் தியாகராஜனின் மாயநதி என்கிற படத்தில் அபி சரவணன், வெண்பா போன்றோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு பவதாரிணி இசையமைத்துள்ளார்.

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் பவதாரிணி இசையமைக்க வேண்டும் என ஆர்வமாக இருந்தேன் என்று இயக்குநர் கூறியுள்ளார். கோடைக் காலத்தில் இந்தப் படம் வெளிவரவுள்ளது. 

மித்ர் மை ஃப்ரண்ட் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான பவதாரிணி கடைசியாக 2012-ல் போரிட பழகு என்கிற படத்துக்கு இசையமைத்தார். ஜான் விஜய் நடித்துள்ள கள்வர்கள் என்கிற படத்துக்கும் இசையமைத்துள்ளார். இந்நிலையில் பவதாரிணி இசையமைத்து நீண்ட நாள் கழித்து ஒரு படம் வெளிவரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com