கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொலைபேசி எண்ணைத் தவறாக வெளியிட்ட தொலைக்காட்சிகள்: சுசாந்த் சிங் காதலி ரியாவால் மன உளைச்சலுக்கு ஆளான நபர்!

சுசாந்த் சிங்கின் காதலி ரியாவின் தொலைபேசி எண் இதுதான் என ஒரு தகவலைச் சமீபத்தில்...

News image
Updated On :13 ஆகஸ்ட் 2020, 6:35 am

DIN

சுசாந்த் சிங்கின் காதலி ரியாவின் தொலைபேசி எண் இதுதான் என ஒரு தகவலைச் சமீபத்தில் சில தொலைக்காட்சிகள் வெளியிட்டன. இதனால் மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒரு நபர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது மகன் சுசாந்த் சிங்கைத் தற்கொலைக்கு தூண்டியதாகவும், அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.15 கோடி மாயமான விவகாரத்தில் தொடா்பு இருப்பதாகக் கூறி, நடிகை ரியா சக்ரவா்த்தி, அவரது தாயாா் சந்தியா சக்ரவா்த்தி, தந்தை இந்திரஜித் சக்ரவா்த்தி, சகோதரா் ஷோயிக் உள்ளிட்ட சில நபா்கள் மீது சுசாந்த் சிங்கின் தந்தை கே.கே. சிங், பாட்னா போலீஸில் புகாா் அளித்திருந்தாா். இந்தப் புகாா் தொடா்பாக அந்த மாநில காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்தனா். அந்த வழக்கை மும்பைக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளார் ரியா. இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுசாந்த் சிங்கின் காதலி ரியாவின் தொலைபேசி இதுதான் என்று கூறி ஒரு தொலைபேசி எண்ணைச் சில தொலைக்காட்சிகள் சமீபத்தில் வெளியிட்டன. ஆனால் அந்தத் தொலைபேசி எண் மஹாராஷ்டிரத்தின் தானே பகுதியைச் சேர்ந்த சாகர் என்பவரின் தொலைபேசி எண்ணாகும். 

தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட தொலைபேசி எண்ணை ரியாவினுடையது என்றெண்ணி பலரும் சாகரின் எண்ணுக்கு போன் செய்து அவரைக் கடுமையாக விமரிசனம் செய்துள்ளார்கள். நூற்றுக்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகளால் மிகுந்த தொல்லையும் மன உளைச்சலுக்கும் ஆளான சாகர், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பிறகு, தன்னைத் துன்புறுத்திய நூற்றுக்கும் அதிகமான தொலைபேசி எண்களை பிளாக் செய்துள்ளார். இந்தப் பிரச்னை ஆரம்பித்ததிலிருந்து சமூகவலைத்தளங்களை அவர் பயன்படுத்துவதில்லை. காவல்துறையினரின் அறிவுரையின்படி தன்னுடைய தொலைபேசியை அணைத்துவிட்டு நண்பரின் தொலைபேசியைப் பயன்படுத்தி வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.