ஒவ்வொரு நாளும் அவரை நினைத்துக் கொள்கிறேன்: கமல் உருக்கம்

என் மேல் வெளிச்சம் பாய்ச்சி, என் கலையுலகக் கதவுகளைத் திறந்த பன்முகத் திறமையாளரும்...
ஒவ்வொரு நாளும் அவரை நினைத்துக் கொள்கிறேன்: கமல் உருக்கம்

தமிழ்த் திரையுலகின் ஜாம்பவானும் தயாரிப்பாளருமான ஏ.வி. மெய்யப்பனின் 113-வது பிறந்த நாளன்று அவரைப் பற்றி ட்வீட் செய்துள்ளார் கமல் ஹாசன். 

கமல் கூறியுள்ளதாவது:

என் மேல் வெளிச்சம் பாய்ச்சி, என் கலையுலகக் கதவுகளைத் திறந்த பன்முகத் திறமையாளரும், பல கனவுகளின் முகவரியுமான ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தின் தந்தை திரு ஏ.வி. மெய்யப்பன் அவர்களின் பிறந்த தினத்தில் மட்டுமல்ல, என் கலைவாழ்வின் ஒவ்வொரு நாளும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

ஏ.வி. மெய்யப்பன் பற்றிய ஆவணப் படத்தை ஏவிஎம் நிறுவனம் யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com