இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

புதுச்சேரியில் பெரும்பாலான திரையரங்குகள் இன்று இயங்கவில்லை: காரணம் என்ன?

இவையெல்லாம் திரையரங்கு உரிமையாளர்களுக்குக் கூடுதல் சுமையாக உள்ளன...

News image
கோப்புப்படம்
Updated On :15 அக்டோபர் 2020, 10:52 am

PTI

புதுச்சேரியில் இன்று முதல் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்பட்டாலும் பெரும்பாலான திரையரங்குகள் இயங்கவில்லை எனத் தெரிகிறது.

கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த மாா்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. இந்த நிலையில், மத்திய அரசு 5-ம் கட்ட தளா்வுகளைக் கடந்த மாதம் அறிவித்தது. அப்போது, சமூக இடைவெளியைப் பின்பற்றி 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கியது.

இதன் காரணமாக, புதுவையிலும் திரையரங்குகளைத் திறக்க புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அருண் அனுமதி வழங்கினாா்.

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது இயக்கப்படும் இரு திரையரங்குகளில் ஒருநாளைக்கு மூன்று காட்சிகளைத் திரையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பார்வையாளர்கள் திரையரங்கினுள் அனுமதிக்கப்பட்டார்கள். மேலும் அவர்களுக்கு முகக்கவசமும் சானிடைசரும் வழங்கப்பட்டுள்ளன. 

நீண்ட நாள்களுக்குப் பிறகு திரையரங்கம் திறக்கப்படுவதால், புதுச்சேரி திருவள்ளூவா் சாலையில் உள்ள ஒரு திரையரங்கம் பொதுமக்களைக் கவரும் வகையில், டிக்கெட் மற்றும் வாகன நிறுத்தக் கட்டணத்தைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ. 120 டிக்கெட் ரூ. 100 ஆகவும், ரூ. 100 டிக்கெட் ரூ. 75 ஆகவும், நான்கு சக்கர வாகனத்துக்கான நிறுத்த (பாா்க்கிங்) கட்டணம் ரூ. 50-ல் இருந்து ரூ. 30 ஆகவும், இரு சக்கர வாகனத்துக்கு ரூ. 20-ல் இருந்து ரூ. 10 ஆகவும் குறைத்துள்ளது.

எனினும் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் திரையரங்குகள் இன்று திறக்கப்படவில்லை. இதற்கான காரணமாகத் திரையரங்குகளின் உரிமையாளர்கள் கூறியதாவது:

புதிய படங்கள் வெளியாகாததால் திரையரங்குகளை உடனடியாகத் திறக்க முடியவில்லை. ஒரு மாலில் நாளை முதல் இரு திரையரங்குகளைத் திறக்க முடிவெடுத்துள்ளார்கள். மேலும் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்படாததால் இங்கும் திரையரங்குகளைத் திறக்கப் பலரும் ஆர்வம் காண்பிக்கவில்லை. 

மேலும் நாட்டிலேயே புதுச்சேரியில் தான் அதிகளவில் ஜிஎஸ்டியுடன் 25% கேளிக்கை வரி வசூலிக்கப்படுகிறது. கூடுதலாக மேலும் சில வரிகள் செலுத்தவேண்டும் என்பதால் இவையெல்லாம் திரையரங்கு உரிமையாளர்களுக்குக் கூடுதல் சுமையாக உள்ளன. கேளிக்கை வரியை நீக்கவேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஏராளமான கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை இயக்கவேண்டும் என்பது சிரமமாக உள்ளது. ஒரு வெள்ளோட்டமாக சில திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. அதன் நிலவரத்தைப் பார்த்த பிறகு இதர திரையரங்குகள் திறக்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.