மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி: கர்நாடக அரசு புதிய உத்தரவு

கர்நாடகத்தில் கரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது.

News image
திரையரங்கில் பார்வையாளர்கள் (கோப்புப் படம்)
Updated On :3 ஏப்ரல் 2021, 6:27 am

DIN

கர்நாடக மாநிலத்தில் எட்டு மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள் ஏப்ரல் 20 வரை 50% பார்வையாளர்களுடன் மட்டும் இயங்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகத்தில் கரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தில் நேற்று கிட்டத்தட்ட 5000 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெங்களூரில் மட்டும் 3509 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தின் பாசிடிவிடி ரேட் 4.64% ஆக உள்ளது. 

இதையடுத்து கரோனா பரவலைத் தடுப்பதற்காகப் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது கர்நாடக அரசு. இந்தியாவில் பிப்ரவரி 1 முதல் 100 சதவீதம் பாா்வையாளா்களுடன் திரையரங்குகள் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் கா்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக பெங்களூர் நகரம், மைசூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் உள்ள திரையரங்குகள் ஏப்ரல் 20 வரை 50% பார்வையாளர்களுடன் மட்டும் இயங்க வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசின் இந்த உத்தரவுக்கு கன்னடத் திரையுலகைச் சேர்ந்த பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள். இந்த உத்தரவால் கன்னடத் திரையுலகம் வருமான இழப்பைச் சந்திக்க நேரிடும் எனக் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.