யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

பெண் குழந்தைக்குத் தாய் ஆனார் நடிகை பூஜா குமார்

விஸ்வரூபம் படத்தில் நடித்த பூஜா குமார், பெண் குழந்தைக்குத் தாயாகியுள்ளார்.

Published On :

கமல் நடித்து இயக்கிய விஸ்வரூபம் படத்தில் நடித்த பூஜா குமார், பெண் குழந்தைக்குத் தாயாகியுள்ளார்.

2000-ம் ஆண்டு காதல் ரோஜாவே என்கிற தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் பூஜா குமார். இதன்பிறகு ஹிந்தி, மலையாளம், ஆங்கிலப் படங்களில் நடித்தார். 2013-ல் கமல் நடித்து இயக்கிய விஸ்வரூபம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களிலும் நடித்தார்.

இந்நிலையில் பெண் குழந்தைத் தாயாகியுள்ளார் பூஜா குமார். ஜாய் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் ஜோஷி, கையில் குழந்தையுடன் பூஜா குமாருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் எழுதியதாவது:

ஒரு காலத்தில் நாங்கள் இருவராக இருந்தோம். இப்போது மூவராக உள்ளோம். பூஜாவும் நானும் எங்களுடைய குழந்தை நாவ்யா ஜோஷியை உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறோம். என்னுடைய பிறந்த நாளுக்குச் சிறந்த பரிசை பூஜா அளித்துள்ளார் என்றார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.