விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கமல் - சரிகா பிரிந்ததில் மகிழ்ச்சியே: ஷ்ருதி ஹாசன்

ஏதோவொரு காரணத்துக்காக சேர்ந்து வாழ கட்டாயப்படுத்தக்கூடாது.

News image
Updated On :26 மே 2021, 9:15 am

DIN

தனது பெற்றோரின் மணமுறிவு குறித்து நடிகை ஷ்ருதி ஹாசன் பேட்டியளித்துள்ளார்.

கமல் ஹாசனும் நடிகை சரிகாவும் 1988-ல் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு ஷ்ருதி, அக்‌ஷரா என இரு மகள்கள் உள்ளார்கள். 2004-ல் கருத்துவேறுபாடு காரணமாக கமலும் சரிகாவும் பிரிந்தார்கள். 

இந்நிலையில் தனது பெற்றோரின் மணமுறிவு பற்றி நடிகை ஷ்ருதி ஹாசன் ஒரு பேட்டியில் கூறியதாவது:

அவர்கள் இருவரும் (கமல், சரிகா) பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே. ஏனெனில் தம்பதியரிடையே கருத்துவேறுபாடுகள் தோன்றிவிட்டால் ஏதோவொரு காரணத்துக்காக சேர்ந்து வாழ கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்கள் இருவரும் அற்புதமான பெற்றோராக உள்ளார்கள். நான் என் தந்தையுடன் நெருக்கமாக உள்ளேன். அம்மா நலமாக உள்ளார். எங்கள் வாழ்க்கையில் அவரும் ஓர் அங்கம். அவர்கள் இருவரும் பிரிந்தபோது நான் சின்னப்பெண். ஒன்றாக வாழ்ந்த காலத்தில் மகிழ்ச்சியாக இருந்ததை விடவும் பிரிந்த பிறகு அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.