பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரமோவில் தாமரையை ராஜூ எச்சரிப்பது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.
இந்த சீசனில் கடந்த வாரம் அபிஷேக் ராஜா வெளியேற்றப்பட்ட பிறகு சுவாரஸ்யம் குறைந்துவிடும் என பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக அனைத்து ப்ரமோவிலும் தாமரை இடம்பெற்று வருகிறார்.
கடந்த புதன்கிழமை தாமரையின் காயினை ஸ்ருதி - பாவினி இருவரும் சேர்ந்து எடுத்ததிலிருந்து தாமரை கொந்தளிப்புடன் காணப்படுகிறார். மேலும், வீட்டில் தனது இருப்பை அனைவருக்கும் தெரிவிக்கும் நோக்கில் கடந்த இரண்டு நாள்களாக அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு வருகிறார்.
உதாரணமாக நேற்றைய நிகழ்வில், இசைவாணியிடம் இமான் அண்ணாச்சி பேசிக் கொண்டிருக்கும் போது தொடர்ந்து தாமரை இடையூறு அளித்து அண்ணாச்சியை கோபப்படுத்தினார். தொடர்ந்து சிபியுடனும் சண்டை போட்டார்.
இந்நிலையில், வெளியாகியுள்ள ப்ரமோவில் நகர அணி - கிராம அணி போட்டியில் பிரியங்கா நகர அணிக்கு சாதகமாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது குறுக்கிட்ட தாமரை கோபமாகவும் சத்தமாகவும் பேசினார்.
இதையடுத்து வெளியான இரண்டாவது ப்ரமோவில் தாமரைக்கு அறிவுரை வழங்கும் ராஜூ, “ நீ பேசுறத ஓரளவுக்குதான் சகித்தி கொள்ள முடியும், ரொம்ப எதார்தமா இருக்கோம்னு ரொம்ப அட்டூழியம் பண்ணாத.. நீ நியாமா நடந்து இருந்தாலும், நீ கத்தி பேசுவதால் வெளியே இருப்பவர்களுக்கு இது நியாமா தெரியாது” என அறிவுரை வழங்குகிறார்.