தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

நீயே ஒளி: சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் மாஜாவில் வெளியான பாடல் (விடியோ)

எஞ்சாய் எஞ்சாமி பாடலுக்கு அடுத்ததாக சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் மாஜா தளத்தில்

News image
Updated On :16 ஜூலை 2021, 11:34 am IST

எஞ்சாய் எஞ்சாமி பாடலுக்கு அடுத்ததாக சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் மாஜா தளத்தில் நீயே ஒளி என்கிற பாடல் வெளியாகியுள்ளது. 

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தீ, அறிவு ஆகிய இருவரும் பாடி நடித்த என்ஜாய் எஞ்சாமி என்கிற பாடலின் விடியோ மார்ச் 7 அன்று யூடியூபில் வெளியானது. பாடலை அறிவு எழுதினார். சுயாதீனக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆரம்பித்துள்ள மாஜா தளத்தில் இப்பாடல் வெளியானது. என்ஜாய் எஞ்சாமிக்கு ரசிகர்கள் மகத்தான வரவேற்பு அளித்தார்கள். யூடியூப் தளத்தில் இதுவரை 290 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் நீயே ஒளி என்கிற புதிய பாடலை வெளியிட்டுள்ளது மாஜா. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்பாடலை ஷான் வின்சென்ட் டி பால், நாவ்ஸ் - 47, சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ளார்கள். பாடலின் விடியோவை எஸ்.வி.டி.பி மற்றும் கலைச்செல்வன் இயக்கியுள்ளார்கள். இந்தப் பாடல் ஆர்யா நடிப்பில் பா. இரஞ்சித் இயக்கி விரைவில் ஓடிடியில் வெளியாகும் சார்பட்டா பரம்பரை படத்திலும் தீம் பாடலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.