நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

உடற்பயிற்சி செய்தபோது தவறிவிழுந்த நடிகர் கார்த்திக் - மருத்துவமனையில் அனுமதி

நடிகர் கார்த்திக் உடற்பயிற்சி செய்யும்போது தவறி கீழே விழுந்ததில் காலில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

News image
Updated On :29 ஜூலை 2021, 1:41 pm IST

நடிகர் கார்த்திக் உடற்பயிற்சி செய்யும்போது தவறி கீழே விழுந்ததில் காலில் அடிபட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

நவசர நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் கார்த்திக் நீண்ட இடைவேளைக்குப் பிறகு பிரஷாந்துடன் இணைந்து ,அந்தகண், என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பிரஷாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். 

இந்த நிலையில் நடிகர் கார்த்திக் வீட்டில் உடற்பயிற்சி செய்யும் போது தவறி கீழே விழுந்ததில் அவருக்கு காலில் அடிபட்டு, நன்றாக வீக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தற்போது சிகிச்சை நடைபெற்று வருகிறது. 

தற்போது அடிபட்ட காலில் சில ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. தற்போது அதே காலில் மீண்டும் அடிபட்டுள்ளதால் எலும்பில் சிறிது விரிசல் ஏற்பட்டுள்ளதாம். அதற்கேற்ப மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். நடிகர் கார்த்திக் தற்போது ஓய்வெடுத்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.