பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜெய்பீம் திரைப்படத்திற்கு பின் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் ’ஜெய்பீம்’மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் அடுத்தாண்டு(2022) பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் பிரியங்கா அருள் மோகன் , சத்யராஜ் , வினய் ,சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இமான் இசையமைக்கிறார்.