நேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

இது விதியா ? விதிமீறலா ?: பிக்பாஸில் விசாரிக்கவிருக்கும் கமல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சமீபத்திய ப்ரமோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

Published On :28 ஜனவரி 2024, 9:59 am IST

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சமீபத்திய ப்ரமோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் துவங்கி 25 நாட்களுக்கு மேலாகிறது. துவக்கத்தில் நிகழ்ச்சியைக் காண மக்களிடையே ஆர்வம் குறைவாக காணப்பட்டது. ஆனால் தற்போது மக்களிடையே சற்று ஆர்வம் அதிகரித்துள்ளதை சமூக வலைதள பதிவுகள் உணர்த்துகின்றன.

கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து யாரும் எதிர்பாராத விதமாக அபிஷேக் வெளியேறினார். இந்த வாரம் எலிமினேஷனுக்கான பட்டியலில் வருண், அபிநய், அக்சரா, பவானி, சின்ன பொண்ணு, இமான், பிரியங்கா, இசைவாணி ஆகியோர் உள்ளனர். இந்த வராம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சின்ன பொண்ணு வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. 

மற்ற போட்டியாளர்களான இசைவாணி, வருண், பாவனியிடம் நாணயங்கள் உள்ளன. பஞ்ச தந்திரம் டாஸ்க்கில் நெருப்பு சக்தி நாணயத்தை வென்ற இசைவாணிக்கு உணவு மற்றும் சமையல் அறை முழுவதும் தனது கட்டுப்பாடுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்ற சக்தியை பிக்பாஸ் வழங்கினார். ஆனால் அதனை இசைவாணி சரியாக பயன்படுத்தவில்லை என பிக்பாஸ் அழைத்து கண்டித்தார். 

அதே போல பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி 25 நாட்களுக்கும் மேலாகிறது. ஆனால் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. இதன் காரணமாக அபிநய் இந்த வாரம் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. நாணயத்தை வைத்திருக்கும் போட்டியாளர்கள் அதனை பயன்படுத்துவார்களேயானால் எலிமினேஷனலில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இன்றைய (அக்டோபர் 30) பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியாகியுள்ளது. பின்னணியில் உத்தம வில்லன் பட இசை ஒலிக்க தோன்றுகிறார் கமல். பின்னர் பேசும் அவர், இது விதியா? இது விதி விலக்கா ? விதி மீறலா ? என் தலைவிதியா ? அப்படினு கூட சிலர் விவாதித்திருக்கிறாரகள். இன்னும் சிலர் சனிக்கிழமை வரட்டும். நான் அவரிடமே பேசிக்கொள்கிறேன் என்கிறார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.