திரையரங்க உரிமையாளர்களின் திடீர் முடிவு: திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல்

ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியிடப்படாது என திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  
திரையரங்க உரிமையாளர்களின் திடீர் முடிவு: திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல்

ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியிடப்படாது என திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இரண்டாவது அலையில் கரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன் காரணமாக, ஓடிடி தளங்கள் தயாரிப்பாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன. படங்கள் சரியான காலகட்டத்தில் வெளியாகவும், ரசிகர்கள் பாதுகாப்பாக படங்களை வீட்டில் இருந்தபடியே பார்ப்பதற்கும் ஓடிடி தளங்கள் பெரிதும் உதவின.

இந்த நிலையில் தற்போது கரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால், தமிழகத்தில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டன. 

ஆனால் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களை திரையரங்கில் வெளியிடுவதில்லை என்ற முடிவை திரையரங்க உரிமையாளர்கள் எடுத்துள்ளனர்.

மேலும், திரையரங்கில் வெளியாகி 4 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற முடிவுக்கு சம்மதிக்கும் படங்களை மட்டுமே திரையரங்குகளில் திரையிடப்படும் என்றும் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

தற்போது பல தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் படங்களை வெளியிட ஓடிடி தளங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர். இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்களின் முடிவால் அந்தப் படங்கள் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com