மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

''பிரேமம் இயக்குநர் சொன்ன கதையில் என் மகன் நடிக்க வேண்டும்...'': விஜய் பகிர்ந்த சுவாரசியத் தகவல்

பீஸ்ட் படம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துகொண்டார். 

News image
Updated On :11 ஏப்ரல் 2022, 10:51 am

DIN

  சன் டிவியில் ஒளிபரப்பான 'பீஸ்ட் பட சிறப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துகொண்டு, இயக்குநர் நெல்சனின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பத்து ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பீஸ்ட் குறித்து பேசிய நடிகர் விஜய், ''படம் வந்த பிறகு தான் தெரியும். என் படத்தைப் பத்தி நானே என்ன சொல்றது. சில படங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கும். சில படங்கள் வெற்றிபெறாது. சில படம் கதையாக நன்றாக இருக்கும். படமாக சரியாக வராது'' என்றார்.

அனிருத் குறித்து நெல்சனின் கேள்விக்கு பதிலளித்த விஜய் அவர், ''இப்போ பீக்ல இருக்காரு. எனக்கு ஏதாவது ஒன்றை அனுப்பிக்கொண்டே இருக்காரு. அனிருத் கடின உழைப்பை கொடுக்கிறார். 

எனக்கும் கோபம் வரும். ஆனால் வெளிப்படுத்திக்கொள்ள மாட்டேன். நாம் எடுக்கின்ற பல முடிவுகள் கோபத்தில் எடுப்பது. பொறுமையா யோசித்து முடிவெடுங்கள். வாழ்க்கையை இலகுவாக எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று குறிப்பிட்டார். 

கடவுள் நம்பிக்கை குறித்த கேள்விக்கு நடிகர் விஜய் பதிலளித்ததாவது, ''எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு. ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது விநாயகர் கோவிலுக்கு சென்றேன். கத்தி படத்தின் படப்பிடிப்பின்போது தர்காவுக்கு சென்றேன். என் அம்மா இந்து, அப்பா கிறிஸ்தவர். இதனால் சிறிய வயதிலிருந்தே அப்படித்தான் என்றார். 

மகன் சஞ்சய் குறித்து கேள்விக்கு, ''அவருக்கு பிடித்ததை பண்ணட்டும். அவர் தான் முடிவு செய்ய வேண்டும். ஒருமுறை 'பிரேமம்' பட இயக்குநர் வந்தார். எனக்குதான் கதை சொல்ல வந்தார் என நினைத்தேன். ஆனால் அவர் சஞ்சயிடம் கதை சொல்ல வேண்டும் என்றார். கதை எனக்கு மிகவும் பிடித்தது. நான் சஞ்சய் அந்த கதையில் நடிக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் அவர் முடிவெடுக்க நேரம் வேண்டும் என்றார். அவர் என்ன செய்தாலும் எனக்கு மகிழ்ச்சி என்று பதிலளித்தார். 

தளபதியிலிருந்து தலைவராக மாறவேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதா என நெல்சன் கேட்க, அதற்கு தளபதியா? தலைவனா? என்பதை ரசிகர்களும் காலமும் தான் முடிவு செய்ய வேண்டும்'' என்றார். 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.