பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஜி.வி.பிரகாஷின் 'செல்ஃபி' படத்தை விமர்சித்த அன்புமணி ராமதாஸ் : ''நீட் பத்தி...''

ஜி.வி.பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் இணைந்து நடித்துள்ள செல்ஃபி திரைப்படத்தை பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார். 

Published On :

ஜி.வி.பிரகாஷ் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ள 'செல்ஃபி' திரைப்படம் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது இந்தப் படத்தை டிஜி ஃபிலிம் கம்பெனி மற்றும் கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. 

இயக்குநர் வெற்றிமாறனின் உறவினரும் உதவி இயக்குநருமான மதிமாறன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Story image

இந்தப் படம் குறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கம் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, ''செல்ஃபி படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்தேன்.

நீட் மற்றும் அதிக கல்வி கட்டணம் காரணமாக நிகழும் தற்கொலைகள் குறித்து தைரியமாக பேசியிருக்கிறது. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் புதுமுக நடிகர் குணநிதி சிறப்பாக செய்துள்ளார்கள். 

நான் பார்த்த சிறந்த ஜி.வி.பிரகாஷின் படங்களில் இதுவும் ஒன்று. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படத்தை அளித்த இயக்குநர் மதிமாறனுக்கு வாழ்த்துகள்.'' என்று தெரிவித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.