திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ரோஜாவுக்கு பதிலாக சன் டிவியில் புதிய தொடர்!

மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ரோஜா தொடர் முடிவுக்குவரவுள்ளதால், அதற்கு பதிலாக சன் டிவியில் புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. 

News image

ஆல்யா மானசா / பிரியங்கா நல்கார்

Updated On :28 நவம்பர் 2022, 6:39 pm IST

மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற 'ரோஜா' தொடர் முடிவுக்குவரவுள்ளதால், அதற்கு பதிலாக சன் டிவியில் புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. 

சன் தொலைக்காட்சியில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் 'ரோஜா' தொடர் விரைவில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது.

பிரியங்கா நல்கார் - சிபு சூர்யன் ஆகியோர் ரோஜா - அர்ஜுன் கதாபாத்திரங்களில் நடித்த இந்த தொடர் குடும்ப ரசிகர்களையும் தாண்டி இளைஞர்கள் மத்தியிலும் பெரிதாகப் பேசப்பட்டது. 

Story image

சன் டிவியின் டிஆர்பி பட்டியலில் முதல் 10 இடங்களில் 'ரோஜா' தொடரும் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இடம்பெற்று வந்தது. தற்போது சன் டிவியின் இந்த தொடர் முடிவுக்கு வரவுள்ளதால், அதற்கு பதிலாக 'இனியா' என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. 

Story image

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொடர் மூலம் மக்கள் மனங்களை வென்ற ஆல்யா மானசா நடிக்கும் இந்த தொடர் ரோஜா தொடருக்கு பதிலாக ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முன்னோட்டக் காட்சிகள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. விரைவில் இனியா தொடர் ஒளிபரப்பப்படும் நேரம் உள்ளிட்டவை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும். 

ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால், கணவன் மனைவி இருவரும் ஒரே தொலைக்காட்சிக்கு மீண்டும் நடிக்கவுள்ளனர்.

மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் சின்னத்திரைக்கு வந்த ஆல்யா, விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் மக்கள் மனங்களை வென்றார். இதில் ஆல்யாவுக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் உடன் காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஏற்கெனவே பெண் குழந்தை பிறந்திருந்த நிலையில், ராஜா ராணி இரண்டாம் பாகத்தின்போது, இரண்டாவது குழந்தைக்காக சிலகாலம் தொடர்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஆல்யா மானசா நடிக்க வருவதால், அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.