முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

5 மொழிகளில் உருவாகிறது சூர்யா 42!

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படம் 5 மொழிகளில் உருவாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

News image

நடிகர் சூர்யா

Updated On :23 ஆகஸ்ட் 2022, 10:48 am IST

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படம் 5 மொழிகளில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலா இயக்கத்தில் சூர்யா வணங்கான் படத்தில் நடித்துவந்தார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. நந்தா, பிதாமகன் படங்களுக்கு பிறகு பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. 

இதனிடையே, சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக படம் பாதியில் நிற்பதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மென்ட் மறுப்பு தெரிவித்தது. 

இந்த நிலையில் வணங்கான் படத்தை மீண்டும் துவங்குவதற்கு முன் சிவா படத்தில் நடித்துமுடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளார். சூர்யாவின் 42 படமான இதில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

மேலும், இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் அடுத்த வாரம் சூர்யா 42-இன் மோஷன் போஸ்டர் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.