மஞ்சு வாரியர் ஏமாற்றப்பட்டாரா? ரசிகர்கள் கிண்டல்! 

துணிவு படத்தின் இரண்டாம் பாடலில் நடிகை மஞ்சு வாரியரின் குரலே இல்லை என சமூக வலைதலங்களில் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். 
மஞ்சு வாரியர் ஏமாற்றப்பட்டாரா? ரசிகர்கள் கிண்டல்! 
Published on
Updated on
1 min read

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். முதல் பாடல் வெளியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வைசாக் எழுதியுள்ள இரண்டாவது பாடலான ‘காசேதான் கடவுளடா’ பாடல் வெளியாகியுள்ளது. வைசாக், மஞ்சு வாரியர் இணைந்து பாடியுள்ளனர். 

ஆனால் இந்தப் பாடலில் மஞ்சு வாரியர் எங்கு பாடியிருக்கிறாரென்றே தெரியவில்லை. இதனை சமூக வலைதளங்களில் மீம்ஸ் பதிவிட்டு கிண்டல் செய்து வருகின்றனர். சிலர் மஞ்சு வாரியர் இனிமையான குரல் கேட்டு மகிழ்ந்தவர் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்றும் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com