/

வனப் பகுதியில் 1080 ஏக்கர் நிலத்தை தத்தெடுத்த பிரபல நடிகர்

வனப் பகுதியில் 1080 ஏக்கர் நிலத்தை பிரபல நடிகர் தத்தெடுத்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:26 am

DIN

தெலங்கானா மாநிலத்தில் மெத்சல் மாவட்டத்தில் 1080 ஏக்கர் நிலத்தை நாகர்ஜூனா தத்தெடுத்துள்ளார். அங்கே அவரது அப்பா நாகேஷ்வர ராவ்வின் நினைவாக பூங்கா ஒன்று அமைக்கப்படவுள்ளது. 

இதுகுறித்து கடந்த வருடம் டிசம்பரில் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது நாகர்ஜுனா அறிவித்திருந்தார். அவர் அறிவித்தபடி இன்று பூங்காவிற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது அவரது மனைவி அமலாவும் உடன் இருந்தார். 

இதனை அவர் தனது மனைவி அமலா, மகன் நாக சைதன்யா, உறவினர் சுஷாந்த் ஆகியோருடன் இணைந்து செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து அறிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.