கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

அதர்வா, சரத்குமார், ரகுமான் இணையும் 'நிறங்கள் மூன்று': முதல் பார்வை போஸ்டர் இதோ

கார்த்திக் நரேன் இயக்கும் நிறங்கள் மூன்று படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 1:30 pm IST

துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அந்தப் படம் விம்ரசன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து அரவிந்த் சாமி நடிப்பில் நரகாசூரன் என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. 

இதனையடுத்து அருண் விஜய் மற்றும் பிரசன்னா இணைந்து நடித்த மாஃபியா படத்தை கார்த்திக் நரேன் இயக்கினார். அந்தப் படம் பெரும் தோல்வியடைந்தது. தற்போது தனுஷ் நடிப்பில் மாறன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. 

Story image

இந்த நிலையில் கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறங்கள் மூன்று என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அதர்வா, சரத்குமார், ரகுமான் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இநத்ப் படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்க, டிஜோ சாமி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் குறித்த இதர தகவல்கள் விரைவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.