ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் பிரபல இயக்குநரின் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். 

News image
Updated On :8 ஜனவரி 2022, 6:54 pm IST

விரும்புகிறேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுசி கணேசன். அந்தப் படம் வெளியாக தாமதமாக ஃபைவ் ஸ்டார் அவரது முதல் படமாக வெளியானது. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்தார் சுசி கணேசன்.

பின்பு அவர் இயக்கிய திருட்டுப்பயலே படம் வெற்றிப் படமாக அமைந்தது.  அந்த வெற்றியின் காரணமாக தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் பிரம்மாண்டமாக உருவான கந்தசாமி படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 

பின்பு திருட்டுப்பயலே படத்தை ஹிந்தியில் இயக்கிய அவர், அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை தமிழில் இயக்கினார். 

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு சுசி கணேசன் தனது அடுத்தப் படத்தை அறிவித்துள்ளார். வஞ்சம் தீர்த்தாயடா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்தப் படம் 1980களில் மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.