தனது இசையின் மூலம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சிவருபவர் இளையராஜா. புத்தாண்டு என்றாலும் இளையாராஜா பாடல், பொங்கல் என்றால் இளையராஜா பாடல் என நம் வாழ்வுடன் கலந்துவிட்டது அவரது இசை.
அவருக்கு பிறகு தமிழ் சினிமாவில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்துவிட்டார்கள். இருப்பினும் அவர்களுக்கு எந்த விதத்திலும் சளைக்காமல் ரசிகர்களுக்கு தற்போதுவரை இசை விருந்து படைத்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்துக்கு அவர் தான் இசை.
இதையும் படிக்க | யுவன், கரு.பழனியப்பன் இணையும் ‘ஆண்டவர்’
இப்படி நம் தாத்தா, அப்பா, துவங்கி, நம் காலத்திலும் இசையால் நம்மை ஆட்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இளையராஜாவின் பாடல் இனி விண்வெளியிலும் கேட்க விருக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த குழு ஒன்று இஸ்ரோ உதவியுடன் உலகில் மிகச்சிறிய செயற்கை கோள்கள் ஒன்றை உருவாக்கியுள்ளதாம். இது நாசாவின் உதவியுடன் வருகிற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அந்த செயற்ககைக்கோள் விண்வெளிக்கு செலுத்தப்பட்டு அங்கு இளையாராஜா பாடல் ஒலிபரப்பப்படவுள்ளது.
இதற்காக இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளில் நடந்த புதுமுகளை உள்ளடக்கி எழுதப்பட்டுள்ள இந்தப் பாடலை இளையராஜா இசையமைத்து பாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

07:07... ஹார்திக் பாண்டியாவின் வைரல் பதிவு..! சிஎஸ்கேவுக்கு வருகிறாரா?

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு! 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

குவாலிஃபையர் 1: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



