பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

விண்வெளியில் இளையராஜா பாடல்? : முழு விவரம்

இளையராஜா இசையமைத்துள்ள பாடல் விண்வெளியில் ஒலிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Published On :

தனது இசையின் மூலம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சிவருபவர் இளையராஜா. புத்தாண்டு என்றாலும் இளையாராஜா பாடல், பொங்கல் என்றால் இளையராஜா பாடல் என நம் வாழ்வுடன் கலந்துவிட்டது அவரது இசை. 

அவருக்கு பிறகு தமிழ் சினிமாவில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்துவிட்டார்கள். இருப்பினும் அவர்களுக்கு எந்த விதத்திலும் சளைக்காமல் ரசிகர்களுக்கு தற்போதுவரை இசை விருந்து படைத்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்துக்கு அவர் தான் இசை. 

இப்படி நம் தாத்தா, அப்பா, துவங்கி, நம் காலத்திலும் இசையால் நம்மை ஆட்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இளையராஜாவின் பாடல் இனி விண்வெளியிலும் கேட்க விருக்கிறது. 

தமிழ்நாட்டைச் சேர்ந்த குழு ஒன்று இஸ்ரோ உதவியுடன் உலகில் மிகச்சிறிய செயற்கை கோள்கள் ஒன்றை உருவாக்கியுள்ளதாம். இது நாசாவின் உதவியுடன் வருகிற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அந்த செயற்ககைக்கோள் விண்வெளிக்கு செலுத்தப்பட்டு அங்கு இளையாராஜா பாடல் ஒலிபரப்பப்படவுள்ளது. 

இதற்காக இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளில் நடந்த புதுமுகளை உள்ளடக்கி எழுதப்பட்டுள்ள இந்தப் பாடலை இளையராஜா இசையமைத்து பாடியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.