திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

புதிய பாட்காஸ்ட்களை இலவசமாக வழங்கும் ஸ்பாடிஃபை

தமிழில் மூன்று புதிய பாட்காஸ்ட்களை இலவசமாக வழங்குவதாக ஸ்பாடிஃபை நிறுவனம் அறிவித்துள்ளது.

News image

ஸ்பாடிஃபை நிகழ்ச்சியில் மா கா பா, ஷாந்தனு, கிகி

Updated On :1 பிப்ரவரி 2024, 3:14 pm IST

தமிழில் மூன்று புதிய பாட்காஸ்ட்களை இலவசமாக வழங்குவதாக ஸ்பாடிஃபை நிறுவனம் அறிவித்துள்ளது. அவை - ஷாந்தனு, கிகியுடனான ஜாலியோ ஜிம்கானா, மை டியர் மா கா பா, கிரைம் ஸ்பாட் - இது ஒரு ரிஷிபீடியா பாட்காஸ்ட்.

உலகின் சிறந்த மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது ஸ்பாடிஃபை நிறுவனம். இந்தியாவிலும் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது. கடந்த வருடம் முதல் ஸ்பாடிஃபை செயலியுடன் தமிழ்நாட்டுக் கலைஞர்களான ஆர்ஜே பாலாஜி, ஆஜே ஆனந்தி, ஆர்ஜே ஷா, கிஷன் தாஸ் போன்றோர் இணைந்துள்ளார்கள். தமிழில் நிகழ்ச்சிகளை வழங்குவதற்காக இம்முயற்சியை அந்நிறுவனம் எடுத்து வருகிறது. ஸ்பாடிஃபை இந்தியா நிறுவனம் 2019-ல் தொடங்கியதிலிருந்து தமிழ் நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

ஸ்பாடிஃபை இந்தியா நிறுவனத்தின் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளுக்கான தலைவர் துருவங்க் வைத்யா இதுகுறித்து கூறியதாவது: இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகள், கலாசாரங்கள் மற்றும் உள்ளடக்கங்கள் காரணமாக பல்வேறு வழிகளில் நேயர்களுடன் தொடர்பில் இருப்பதற்கான முயற்சியை நாங்கள் மேற்கொள்கிறோம். எங்களுடைய வளர்ச்சியில் தமிழ் நேயர்களும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். 

செயலியைத் தொடங்கியது முதல், பாட்காஸ்ட் உள்ளிட்ட தமிழுக்கான பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறோம். அதிகாரபூர்வமான இசை, நிகழ்ச்சிகளை தமிழ் நேயர்களுக்கு வழங்க எண்ணுகிறோம். இதற்காக பாட்காஸ்ட் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.