உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

35 கிலோ வரை எடை குறைக்கும் நடிகர் அஜித்

நடிகர் அஜித் தனது அடுத்தப்படத்துக்காக 35 கிலோ வரை எடை குறையவிருக்கிறாராம். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:03 pm IST

நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் இடம்பெற்ற பைக் ரேஸ் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

இதனையடுத்து நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் இணையும் படத்துக்கு தற்காலிகமாக ஏகே 61 என அழைத்து வருகின்றனர். வலிமை படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் ஏற்பட்ட மனக் கசப்பால் இந்தப் படத்துக்கு வேறு இசையமைப்பாளர் இசையமைக்கவிருக்கிறார். 

அனிருத் அல்லது ஜிப்ரான் இசையமைக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் கவின் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். இந்தத் தகவலை அவரது ரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். 

இன்னும் சில வாரங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தப் படத்துக்காக நடிகர் அஜித் 35 கிலோ வரை எடை குறையவிருக்கிறாராம். தற்போது 10 கிலோ எடை குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் இயக்குநர் வினோத் பட பாணியில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.